குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது


குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
x

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே கூவாட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து விட்டதாக தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். இதன்பேரில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

1 More update

Next Story