புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு


புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு
x

தச்சநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் 13-வது வார்டு தளவாய்புரத்தில் மாநகராட்சி சார்பில் சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் சங்கர், தி.மு.க. மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, இளநிலை பொறியாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story