சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்


சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்
x
தினத்தந்தி 12 Jan 2023 2:12 AM GMT (Updated: 12 Jan 2023 4:37 AM GMT)

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.

சென்னை,

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் கூட்டத்தின் முதல் நாளிலேயே கவர்னர் ஆர்.என்.ரவி உரையால் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.

இந்த நிலையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். 2004-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார்.

ராமர் பாலம் இடிப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளால் சேது சமுத்திரம் திட்டம் தொடர்ந்து தாமதாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story