வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 12 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 6:45 PM GMT)

தகராறை தட்டி கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தகராறை தட்டி கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

செண்பகராமன்புதூர் யோகீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய பக்கத்து வீட்டை சோ்ந்த நாகராஜன் (வயது 34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கருணாகரன் வீட்டில் ஒலி பெருக்கியை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அதிக சத்தம் கேட்டதாக கூறி நாகராஜன், கருணாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கருணாகரன் தனது மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். மகன் தனது நண்பரான அகஸ்தியர் காலனியை சேர்ந்த ஜாண் அனிஷ் (32) என்பவரை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நாகராஜனிடம் ஏன் சண்டை போடுகிறாய் என ஜாண் அனிஷ் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜாண் அனிஷ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.


Next Story