வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்(வயது35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ்(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வின்சென்ட் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆகாஷ் கையில் வைத்திருந்த அரிவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி நாச்சியார் கோவில் போலீசில் வின்சென்ட் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story