வாலிபருக்கு அரிவாள் வெட்டு; வக்கீல் கைது


வாலிபருக்கு அரிவாள் வெட்டு; வக்கீல் கைது
x

வாலிபரை அரிவாளால் வெட்டிய; வக்கீல் கைது செய்யப்பட்டார்

திருச்சி

சமயபுரம், ஆக.31-

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தானு (வயது 34). வக்கீலான இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்த ஊராட்சியின் 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதே ஊரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் வெற்றி பெற்றார். இளங்கோவனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (22) என்பவர் தேர்தல் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இவருக்கும், தானுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராசாம்பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வக்கீல் தானுவும், அவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரும் பாலசுப்பிரமணியத்தை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இது குறித்து பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் தானுவை கைது செய்தார். கண்ணனை தேடி வருகின்றார்.


Next Story