புகையிலை விற்ற கடைக்காரர் கைது


புகையிலை விற்ற கடைக்காரர் கைது
x

புகையிலை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வெற்றிவிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 47). இவர் திசையன்விளை மேல பள்ளிவாசல் அருகில் கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கடையில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்கு வைத்து இருந்த 63 குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story