புகையிலை விற்ற கடைக்காரர் கைது


புகையிலை விற்ற கடைக்காரர் கைது
x

திசையன்விளை அருகே புகையிலை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த குருகாபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55). இவர் குருகாபுரத்தில் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த தடைசெய்யப்பட்ட 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பொன்ராஜையும் கைது செய்தனர்.


Next Story