போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை சரவணகுமாரும், அவரது குடும்பத்தினருடன் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து அவர்கள், போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டுக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





