வீட்டிற்குள் புகுந்த பாம்பு


வீட்டிற்குள் புகுந்த பாம்பு
x

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டுள்ளது.

கரூர்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை ஜீவா நகரில் வசிப்பவர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடிப்படி அருகே பாம்பு ஒன்று சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பு இருக்கும் இடத்தை கண்டறிந்து, பாம்பு பிடிக்கும் உபகரணத்தின் உதவியுடன் லாவகமாக பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story