தாராபுரத்தில் சிறப்பு முகாம்


தாராபுரத்தில் சிறப்பு முகாம்
x

தாராபுரத்தில் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

திருப்பூர்

திருப்பூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் 100 மருத்துவ முகாம் நடத்த உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.மாற்றத்திறனாளிகள் அடையாள அட்டை, யு.டி.ஐ.டி.-க்கு பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே 2-வது சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தாராபுரத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அரசின் பிற நலத்திட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெற ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றுகளுடனும், மருத்துவ சிகிச்சை பெற்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் மார்பளவு புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

----

1 More update

Next Story