கரை ஒதுங்கிய இலங்கை படகு


கரை ஒதுங்கிய இலங்கை படகு
x

கோடியக்கரையில், இலங்கை படகு கரை ஒதுங்கியது. அந்த படகை கைப்பற்றி உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

கோடியக்கரையில், இலங்கை படகு கரை ஒதுங்கியது. அந்த படகை கைப்பற்றி உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய இலங்கை படகு

நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் சந்தல் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அருகே கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்து மூழ்கிய நிலையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கி கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதி மீனவர்களின் உதவியுடன் கரை ஒதுங்கி கிடந்த படகை டிராக்டர் மூலம் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இலங்கையை சேர்ந்தது

விசாரணையில், அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. மீனவர்கள் மீன் பிடித்தபோது அந்த படகு உடைந்து கவிழ்ந்ததா? அல்லது இலங்கையில் கடற்கரையில் கட்டி வைத்து இருந்தபோது காற்றின் வேகத்தில் தானாக அறுத்துக்கொண்டு வந்ததா? அல்லது கடத்தல் காரர்கள் வந்த படகா? என பல்வேறு கோணங்களில் போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

கரை ஒதுங்கி கிடந்த படகில் ஒரு போயா (உருண்டை மிதவை), ஒரு டியூப் சிறிய பலகை, ஒரு சுடு தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர்.

கோடியக்கரையில் இலங்கை படகு கரை ஒதுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story