ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா


ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா
x

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழாவில் 50 ஆடுகள் பலியிட்டும், சாத உருண்டைகள் படைத்தும் வழிபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இங்குள்ள கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம்.

இங்கு வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுகிறது.

50 ஆடுகள் பலி

இந்த திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. ஆண்கள் ஒன்று கூடி மண்ணால் பீடம் அமைத்து எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்தனர். பின்னர் கைக்குத்தல் பச்சரிசி சாதம், 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, அதன் தலைகளை பீடத்திற்கு முன்பு வைத்து, சாதத்தை உருண்டைகளாக உருட்டி பூஜை செய்தனர்.

தொடர்ந்து பனை ஓலையால் செய்த மட்டையில் சாப்பாடு பறிமாறப்பட்டது. இந்த சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவுஅங்கேயே மண்ணில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.


Next Story