கிணற்றில் தவறி விழுந்து மாணவி பலி


கிணற்றில் தவறி விழுந்து மாணவி பலி
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கனிஷ்கா (வயது 7). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கனிஷ்கா நேற்று முன்தினம் தனது பாட்டி மற்றும் அக்காவுடன் அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றாள். அப்போது எதிர்பாராதவிதமாக அவள் அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மாணவியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிறுபாக்கம் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story