மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவன் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவன் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் திவாகர் (வயது 13), 8-ம் வகுப்பு படித்து வந்தான். திவாகர் தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் கீழ்அணைக்கரை புதிய பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் திவாகர் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த திவாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story