கிணற்றில் நீச்சல் பழகிய மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.


கிணற்றில் நீச்சல் பழகிய மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
x

கிணற்றில் நீச்சல் பழகிய மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

கிணற்றில் நீச்சல் பழகிய மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.

அரக்கோணம் மதுரை பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். சென்னை அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தட்சிணாமுர்த்தி (வயது 14), அரக்கோணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் தட்சிணாமுர்த்தி தனது நண்பர்களுடன் கீழ்குப்பம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அங்கு நீச்சல் பழகி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தட்சிணாமுர்த்தி நீரில் மூழ்கி விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கிணற்றில் நீண்ட தேடுதலுக்கு பின் மாணவன் தட்சிணாமுர்த்தியை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story