கடையத்தில் திடீர் சூறைக்காற்று; பெயர் பலகை பறந்து விழுந்து 3 கார்கள் சேதம்

கடையத்தில் திடீர் சூறைக்காற்றில் பெயர் பலகை பறந்து விழுந்தது. இதில் 3 கார்கள் சேதம் அடைந்தன.
கடையம்:
கடையம் பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பஸ்நிலையம் அருகில் மாடியில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிதி நிறுவனத்தின் பழைய பெயர் பலகை பறந்து ரோட்டின் ஓரம் நின்ற கார்களின் மீது விழுந்தது. இதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெயர் பலகையை அப்புறப்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





