கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு வந்தது


கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு வந்தது
x

கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு வந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனை தடுக்கும் வகையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவின் பயன்பாட்டை உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story