தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2022 9:05 PM GMT (Updated: 10 Dec 2022 10:15 AM GMT)

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி

கொல்லங்கோடு :

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் கூட்டங்கல்விளை பகுதியை சேர்ந்தவர் மனு (வயது 31). இவருடைய மனைவி தம்புரு ( 27). கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு மதுபோதை சாகப் போகிறேன் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மனு வீட்டில் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து தம்புரு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும் இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story