மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேரம்பாக்கம்,

திருவள்ளூர் மாவட்டம் ஆயக்கொளத்தூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அப்பு முருகன் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (22) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பு முருகன் பேரம்பாக்கம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி பார்வதி கோபித்து கொண்டு அதே கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அப்பு முருகன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

தற்கொலை

நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அப்பு முருகன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற துக்கத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததை கண்ட அக்கம்பக்கத்தனர் பார்வதிக்கு தகவல் தெரிவித்தனர். பார்வதி வந்து பார்த்தபோது அப்பு முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பார்வதி மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அப்பு முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். தொர்டந்து தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story