விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:48 PM GMT)

சேரிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

கோயம்புத்தூர்

நெகமம்

சேரிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

பெண் மீது மோதியது

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராகுல் (வயது 26). இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே எம்மேகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராகுல் நேற்று முன்தினம் எம்மேகவுண்டன்பாளையத்தில் இருந்து சேரிபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

சேரிபாளையம் கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா(57) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

சிகிச்சை பலனின்றி...

இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து ராகுலும் பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டனர். தொடர்ந்து ராகுலை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியிலும், சகுந்தலாவை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். சகுந்தலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story