விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

ராஜபாளையம் அருகே விபத்தில் பலியானார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சென்னிகுளம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் காசி பாண்டியன் (வயது 38). இவர் தளவாய்புரம் பகுதியில் இருந்து புனல்வேலி செல்லும் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் காயம் அடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி முத்துமாரி அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story