மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோஸ் (வயது32) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மறுகால்விளையில் வந்தபோது பறையன்கோட்டை விளையைச் சேர்ந்த பாலையன் (51) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஜோஸ் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அதற்குள் பாலையன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜோஸ் வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பாலையனை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story