உளுந்தூர்பேட்டை அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே நீரில் மூழ்கி வாலிபர் உயிாிழந்தாா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சூர்யா(வயது 24). சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றார். அப்போது அவா் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story