ரேஷன் கடை முன்பு வாலிபர் தீக்குளிப்பு


ரேஷன் கடை முன்பு வாலிபர் தீக்குளிப்பு
x

ரேஷன் கடை முன்பு வாலிபர் தீக்குளித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பேச்சியப்பன் (வயது26). இவரது மனைவி விஜி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. குடிபழக்கம் உள்ள பேச்சியப்பன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை முன்பு தனது உடலில் பேச்சியப்பன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பேச்சியப்பனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக சேர்த்தனர். பலத்த தீக்காயம் அடைந்த பேச்சியப்பனுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Next Story