ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
கோவை
கோவை வடகோவை-பீளமேடு ரெயில்நிலையங்களுக்கு இடையே ரெயில்வே தண்டவாளம் ரத்தினபுரி பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் கோவை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





