கழுத்தை அறுத்து வாலிபர் கொலை


கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

திருவாரூர் கமலாலய குளக்கரையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர்

திருவாரூர் கமலாலய குளக்கரையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

திருவாரூர் அரசங்குளம் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் கார்த்தி(வயது 22). இவர் நேற்று இரவு 8 மணி அளவில் திருவாரூர் கமலாலய குளத்தின் படகுத்துறை மண்டபத்துக்கு சென்றார்.அப்போது அங்கு திருவாரூர் இளவங்கார்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை கார்த்தி தட்டி எழுப்பி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கார்த்தியை தாக்கி, கத்தியால் அவருடைய கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்தி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இதைத்தொடர்ந்து மணிகண்டன் நேராக திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள திருவாரூர் கமலாலய குளத்தின் கரையில் நடந்த இந்த கொலை திருவாரூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story