லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x

ஊ.மங்கலம் அருகே லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

கம்மாபுரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டுப்படுகை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ரகு (வயது 32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தாங்கல் கிராமத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரகு நேற்று முன்தினம் இரவு விருத்தாசலத்தில் இருந்து ஊத்தாங்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஊ.மங்கலம் அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரகுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story