லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x

லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சம்பத்தின் மகன் வெங்கட்ரமணி(வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குணசேகரனின் மகன் விக்னேஸ்வரனுடன்(26) நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்ப அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். சாத்தமங்கலம் அருகே சென்றபோது எதிரே சாத்தமங்கலம் சர்க்கரை ஆலையில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வெங்கட்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேஸ்வரனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story