திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் கொலை- 4 பேருக்கு வலைவீச்சு


திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் கொலை- 4 பேருக்கு வலைவீச்சு
x

திருப்பரங்குன்றம் அருகே முன்விரோதத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை வழிமறித்து தாக்கி கொலை செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே முன்விரோதத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை வழிமறித்து தாக்கி கொலை செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வழிமறித்து ஆயுதங்களால் தாக்குதல்

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர்நகரில் வசித்து வந்தவர் சரவணன்(வயது 32). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருநகர் 5-வது பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் சரவணனை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் மதுபாட்டில், இரும்பு கம்பி மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். உடனே அந்த 4 பேரும் அங்கு தப்பியோடி விட்டனர்.

4 பேருக்கு வலைவீச்சு

இந்தநிலையில் காயம் அடைந்த சரவணனை மீட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதுதொடர்பாக சரவணனின் மனைவி பிரியதர்சினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் முன்விரோதம் காரணமாக நெல்லையப்பபுரத்தை சேர்ந்த ராஜ்(27), பாண்டியன் நகரை சேர்ந்த விஸ்வா(20), ஆனந்த்(19), கார்த்திக் (19) ஆகிய 4 பேரும் பயங்கர ஆயுதங்களால் சரவணனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story