ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத வாலிபர் அடித்துக்கொலை


ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத வாலிபர் அடித்துக்கொலை
x

ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத வாலிபர் அடித்துக்கொலை.

கோவை,

கோவை பீளமேடுபுதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நில புரோக்கர் லட்சுமணன் (40) என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.250 கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லட்சுமணன், கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த கடன் ரூ.250-ஐ திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், கங்கேஸ்வரனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது போதையில் இருந்த அவர், சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.


Next Story