மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா ராசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் சரண் (வயது 24). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் விராலிமலைக்கு செல்வதற்காக சரண் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சரணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story