தந்தையை கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தந்தையை கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாட்டறம்பள்ளி அருகே தந்தையை கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் முத்து (வயது 30). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தனது தந்தை மோகனை கழுத்தில் காலால் மித்து கொலை செய்தார். முத்துவை நாட்டறம்பள்ளி போலிசார் சென்னையில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் நாட்டறம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலிசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை கொலை செய்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story