தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா
x

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த முப்பெரும் விழாவில் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த முப்பெரும் விழாவில் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

முப்பெரும் விழா

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்குதுணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார். பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தைத் துணைவேந்தர் திருவள்ளுவன் ஏற்றிவைத்தார். தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக ஆஸ்பத்திரிகளின் இயக்குனர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் படியை மேயர் சண்.ராமநாதன் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் புதல்வர் ராஜலிங்கம், வடலூர் சங்க கவுரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வெற்றிவேல், டாக்டர்.சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரிசு

முன்னதாக காலையில் நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் கல்லூரி பேச்சுப் போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ.30 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000- வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை வடலூர் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் அருள் நாகலிங்கம், பேராசிரியர்கள் மஞ்சுளா, சங்கரராமன், கவிஞர் வெற்றிச்செல்வன், யோகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story