ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது


ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 3 Aug 2023 7:57 PM GMT (Updated: 3 Aug 2023 7:58 PM GMT)

அய்யம்பேட்டை அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் காயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி அய்யம்பேட்டை பகுதிக்கு வந்தது. லாரியை திருவலஞ்சுழியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். அய்யம்பேட்டை அருகே வழுத்தூருக்கு வந்த டிரைவர் ஜல்லிகற்களை கொட்ட முயன்றார் அப்போது திடீரென லாரி ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story