ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்


ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்
x

உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் குடியாத்தத்தில் இருந்து காஞ்சீபுரம் வரை நடைபெறுகிறது. விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் ரங்காவாசுதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே.கே.என்.பழனி ஆகியோர் கலந்து கொண்டு இருசக்கர வாகன ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story