மாடுகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்தது

மாடுகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்தது
கருமத்தம்பட்டி
கோவை-அவினாசி ேராட்டில் ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அதில் 8-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. அந்த வேன் கருமத்தம்பட்டி அருகே வந்த போது திடீரென வேனின் சக்கரங்களை இணைக்கும் அச்சு முறிந்தது. இதனால் டயர்கள் தனித்தனியாக கழன்று ஓடியதால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 8 மாடுகளும் படுகாயம் அடைந்தன. மேலும் வேனின் டிரைவர் மற்றும் உதவியாளரும் காயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மாடுகள் மற்றும் டிரைவர், உதவியாளரை மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





