சாலையோரம் இறந்து கிடந்த வெல்டர்


சாலையோரம் இறந்து கிடந்த வெல்டர்
x

சாலையோரம் வெல்டர் இறந்து கிடந்தார்.

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட் உப்புப்பாறை பகுதியை சேர்ந்தவர் திரவியம் (வயது 45). இவர் திருச்சி கே.கே.நகர் தேவராய நகர் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை திருச்சி கே.கே.நகர் சபரிமில்ஸ் பஸ் நிறுத்தம் அருகில் திரவியம் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story