குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசியை அடுத்த சூரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் நந்தினி (வயது 25). அகரகாரம் கிராமத்தைச் சேர்ந்த காளி மகன் ஏழுமலை என்பவரை 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நந்தினிக்கும் ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது நடராஜ் அவர்களை சமாதானப்படுத்தினார்.

அதன்பின் நந்தினி அவருடைய தந்தை நடராஜ் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நந்தினி, வீட்டில் அவருடைய துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கீழ் கொடுங்காலூர் போலீசில் நடராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story