விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலியானார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பார்வதி (வயது 47). இவர் நேற்று தனது மகன் சந்தோஷ்குமாருடன் (22) அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த பார்வதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





