மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல்


மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல்
x

மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வார்டு உறுப்பினர்களுக்கு ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆலத்தூர் ஒன்றிய இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பூர் ஒன்றிய கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் ஒரு கிராம ஊராட்சி தலைவர், 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி நடக்கிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருந்த நிலையில், நேற்று மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ெபண் ஒருவர் பெரம்பலூர் ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்னும் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.


Next Story