கண்ணில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு


கண்ணில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு
x

ராமநத்தம் அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கொளஞ்சி (வயது 58). இவர் நேற்று காலை தனது வயலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பினார்.

அப்போது கீழ் ஆதனூர் ஓடை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 போ் திடீரென கொளஞ்சி கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தனர். இதில் கண் எரிச்சல் தாங்க முடியாமல் கொளஞ்சி அலறி துடித்தார்.

இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபர்களை விரட்டிப்பிடிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கொளஞ்சி ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story