பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண், வாகனம் மோதி பலி


பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண், வாகனம் மோதி பலி
x

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாடிப்பட்டி அருகே வாகனம் மோதி பலியானார்.

மதுரை

வாடிப்பட்டி

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாடிப்பட்டி அருகே வாகனம் மோதி பலியானார்.

பாதயாத்திரை

மதுரை மாவட்டம் மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி ஜெயசித்ரா (வயது 45). வீட்டில் பசு மாடு வளர்த்துக் கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் குடியிருந்தவர்கள் பழனி பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர். அவர்களுடன் ஜெயசித்ராவும் புறப்பட்டார். நேற்று அதிகாலை 5.15 மணிக்கு வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் எதிரே உள்ள டீக்கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார்.

பலி

அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story