ஆரணியில் தனியார் விடுதியில் தொழிலாளி திடீர் சாவு


ஆரணியில் தனியார் விடுதியில் தொழிலாளி திடீர் சாவு
x

ஆரணியில் தனியார் விடுதியில் தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

காஞ்சீபுரம் மாவட்டம் பாலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42), ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 24-ந்தேதி ஆரணிக்கு வந்த பன்னீர்செல்வம், ஆரணி காந்தி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார். நேற்று முன்தினம் விடுதி மேலாளரிடம் நெஞ்சு எரிச்சலாக இருப்பதாக பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story