தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த தொழிலாளி


தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த தொழிலாளி
x
தினத்தந்தி 18 Jun 2023 1:15 AM IST (Updated: 18 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த தொழிலாளி

கோயம்புத்தூர்

நெகமம்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே அரசூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 53). கூலித்தொழிலாளி. இவர் நெகமம் அருகே காட்டம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் செல்வராஜ் நேற்று முன்தினம் வழக்கம்போல் தோட்டத்துக்கு வேலைக்காக வந்தார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடி தோட்டத்துக்கு வந்தனர்.

அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் செல்வராஜ் பிணமாக மிதந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நெகமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story