காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை
x

வலங்கைமான் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

காதலுக்கு எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பாதிரிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகள் தர்ஷினி(வயது 19). இவரும், அதே ஊரை சோ்ந்த ஒரு வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர்.

இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தர்ஷினியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் ரோஷன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

தீக்குளித்து பெண் தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த தர்ஷினி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் அவர் உடல் முழுவதும் எரிந்து படுகாயம் அடைந்தார்.

அதைப்பார்த்த அவரது சகோதரர் ரோஷன் ஓடிச்சென்று தனது சகோதரியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த ரோஷனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story