இளம்பெண் மாயம்

தியாகதுருகம் அருகே இளம்பெண் மாயமானாா்.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவரது மகள் அனுராதா (23). இவர் கடந்த 29-ந் தேதி விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அனுராதா கிடைக்கவில்லை. இது குறித்து அனுராதாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





