குடிபோதையில் கணவர் அடித்ததால் இளம்பெண் தற்கொலை


குடிபோதையில் கணவர் அடித்ததால் இளம்பெண் தற்கொலை
x

குடிபோதையில் கணவர் அடித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவருடைய தந்தை புகார் அளித்துள்ளார்.

சென்னை

காதல் திருமணம்

சென்னை கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. இவர், சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா (வயது 27). இவர்கள் இருவரும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் கடந்த 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக ரகுபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொைல

நேற்று முன்தினம் இரவு ரகுபதி வழக்கம்போல் குடிபோைதயில் வீட்டுக்கு வந்தார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரகுபதி, தனது காதல் மனைவி பிரியங்காவை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த பிரியங்கா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிரியங்காவின் தந்தையான புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்த ரமேஷ், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியங்காவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story