சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் அறந்தாங்கி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணமேல்குடி சீதாராமன்பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 26) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சதாம் உசேனை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





