சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் மில்லடி தெருவில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் மகன் பாண்டித்துரை (வயது24) என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டித்துரையை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story